அரசு பள்ளி மாணவி மாயம்

2 weeks ago 3

தர்மபுரி, ஜன. 22: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை கக்கன்ஜிபுரம் பகுதியை சேர்ந்த 17 சிறுமி, கோபிநாதம்பட்டியில் உள்ள விடுதியில் தங்கி, அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு சிறுமி தனது வீட்டிற்கு வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்த வெளியே சென்ற சிறுமி, பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும், எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

The post அரசு பள்ளி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article