அரசு பணிகளில் இந்த ஆண்டு எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்? - டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்

3 hours ago 1

சென்னை: தமிழ்​நாடு அரசு பணியாளர் தேர்​வாணையம் (டிஎன்​பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலி​யிடங்கள் நிரப்​பப்​படும் என்பது ஏப்ரல் மாதம் தெரிய​வரும் என்று தேர்​வாணை​யத்​தின் தலைவர் எஸ்.கே.பிர​பாகர் தெரி​வித்​தார்.

அரசு பணிகளில் சேர விரும்​புவோரின் வசதிக்காக டிஎன்​பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்ட​வணையை ஆண்டு​தோறும் வெளி​யிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்ட​வணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளி​யிட்​டது. அதில் குரூப்-1 தேர்வு, ஒருங்​கிணைந்த குரூப்-2, 2ஏ தேர்வு, குரூப்-4 தேர்வு,தொழில்​நுட்ப பணிகள் தேர்வு (நேர்​முகத் தேர்வு மற்றும் நேர்​முகத் தேர்வு இல்லாதது) என மொத்தம் 7 தேர்​வு​களுக்கான அறிவிப்புகள் இடம்​பெற்றுள்ளன.
வழக்​கமாக வருடாந்திர தேர்வு அட்ட​வணை​யில், என்னென்ன தேர்​வு​கள், எத்தனை காலி​யிடங்கள் என்பன உள்ளிட்ட விவரங்​களும் விரிவாக குறிப்​பிடப்​பட்​டிருக்​கும். ஆனால், 2025-ம் ஆண்டு தேர்வு அட்ட​வணை​யில் அதுபோன்று காலி​யிடங்கள் பற்றிய விவரம் இடம்​பெற​வில்லை.

Read Entire Article