அரசு பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு

6 hours ago 1

சென்னை,

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியின்றி மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கவும் தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இந்த சூழலில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

அரசு பணிகளில் பதவி உயர்வின்போது, பணியிட மாறுதலின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். அரசால் கண்டறியப்பட்ட பதவிகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படும். இதில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதம், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதம், பெருமூளை வாதம், தசைநார் சிதைவு, அமில திரவம் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீதம், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீதம், அனைத்து மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு 1 சதவீதம் என மொத்தம் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article