அமெரிக்காவிடம் இருந்து எப்-35 போர் விமானங்களை வாங்கும் இங்கிலாந்து

6 hours ago 2

லண்டன்,

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரிக்கும் அதிநவீன போர் விமானமாக எப்-35 போர் விமானம் உள்ளது.எதிரி நாடுகளில் ரேடாரில் சிக்காமல் பறந்து செல்லும் திறன்கொண்ட அந்த போர் விமானம், குறுகிய ஓடுபாதையில் இயங்குவது, போர் கப்பல்களில் தரையிறக்கம் போன்ற அசாத்திய திறன்களை கொண்டது.

அமெரிக்காவின் ராணுவம் தவிர்த்து ஜப்பான், இஸ்ரேல் மற்றும் இங்கிலாந்து நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்த எப்-35 ரக போர் விமானம் ஒன்றின் விலை ரூ.860 கோடி (100 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆக உள்ளது.இந்தநிலையில் அமெரிக்காவிடம் இருந்து புதிதாக 12 எப்-35 ரக போர் விமானங்களை இங்கிலாந்து வாங்க முடிவு செய்துள்ளது.அணு ஆயுதங்களை ஏந்தி சென்று இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போர் விமானங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் சப்ளை செய்யப்பட உள்ளது.

Read Entire Article