மதுரை: “ஒரு பகுதியில் அதிகமாகவும், மற்றொரு பகுதியில் குறைவாகவும் ஏற்ற, இறக்கத்துடன் வரிகள் விதிக்கப்படுவதாக புகார்கள் வருகிறது. அரசு நிர்ணயித்தபடி வரி விதிப்பு சீராக இருக்க வேண்டும்” என நகராட்சி நிர்வாகத்துறை கே.என்.நேரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் இன்று நடந்தது.