தர்மபுரி, டிச.6: தர்மபுரி அரசு கலைக்கல்லூரி அருகே இருந்து தடங்கம் பகுதிக்கு செல்வதற்கு, ரயில்வே கிராசிங்கில் நுழைவு பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக தடங்கம், வெண்ணாம்பட்டி, குள்ளனூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு தடங்கம் பகுதியில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டது. இதனையடுத்து, தர்மபுரி நகரில் இருந்து நீதிமன்றங்களுக்கு டூவீலரில் செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அரசு கலைக்கல்லூரி ஒட்டியபடி உள்ள சிறிய நுழைவு பாலம் வழியாகவே செல்ல வேண்டி உள்ளது. இப்பாலம் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் வகையில் குறுகலாக உள்ளதால், காலை நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ரயில்வே நுழைவு பாலத்தை அகலப்படுத்த, ரயில்வே துறைக்கு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அரசு கல்லூரி அருகே ரயில்வே நுழைவு பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.