அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

3 months ago 7

சென்னை: அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு உதவி வழக்கு நடத்துநர் (கிரேடு 2) பதவிக்கான ஒளிக்குறி உணரி மறுத்தேர்வு (முதல்நிலைத் தேர்வு) வருகிற 22ம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article