அரசு உதவி மருத்துவர் பணியிடத்துக்கான தகுதி பட்டியலில் 400 மருத்துவர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு

2 hours ago 2

சென்னை: தமிழகம் முழு​வதும் புதிதாக நியமிக்​கப்​பட​வுள்ள 2,642 அரசு உதவி மருத்​துவர்​களுக்கான தகுதி பட்டியலில் இருந்து 400 மருத்​துவர்களை நீக்​கியதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், பணி நியமனம் வழக்​கின் இறுதி தீர்ப்​புக்கு கட்டுப்​பட்டது என உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் காலியாக உள்ள 2,642 அரசு உதவி மருத்​துவர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் கடந்த ஜன.5 அன்று தேர்வு நடத்​தி​யது.

அதன்படி தேர்வு முடிந்து தகுதியான மருத்​துவர்​களின் தகுதிப் பட்டியலை தேர்வு வாரியம் வெளி​யிட்​டது. அதன்​பிறகு இதில் 400 பேர் கடந்த 2024ஜூலை 15-க்கு முன்பாக மருத்துவக் கவுன்​சிலில் பதிவு செய்ய​வில்லை எனக்​கூறி தகுதிப்​பட்​டியலில் இருந்து அவர்​களின் பெயர்களை தேர்வு வாரியம் நீக்​கியது. இதை எதிர்த்து பாதிக்​கப்​பட்ட மருத்​துவர்கள் பிரியதர்​ஷினி, சாய் கணேஷ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.

Read Entire Article