சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:மாணவ, மாணவியரின் சிந்தனையும், கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன என்பதால் தாய்மொழியாம் தமிழ்மொழி வழிக்கல்வி அவசியம் என்பதை அனைவரும் வலியுத்துகின்றனர்.
நம் நாட்டின் தாய்மொழியாம் தமிழ்மொழி வளர்க்கப்பட வேண்டுமென்றால், தமிழ்நாடு அரசின் ஆணைகள், கோப்புகள், தகவல் தொடர்புகள் ஆகியவை தமிழில் இருக்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில், பொதுத்துறை நிறுவனங்களில் முழுவதுமாக தமிழ் மொழியை பயன்படுத்தவும், பிற மாநிலங்களில் தமிழ் மொழியை வளர்க்கவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
The post அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை முழுவதுமாக பயன்படுத்த நடவடிக்கை: ஓ.பி.எஸ். appeared first on Dinakaran.