சென்னை: திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் சென்னையில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. பொங்கல் திருநாள் நெருங்கிவிட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சென்னையில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம் தொகுதி திமுக சார்பில் பொங்கல் விழா வியாசர்பாடியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், எபினேசர், ஐட்ரீம்ஸ் மூர்த்தி மற்றும் தொண்டர்களுடன் இணைந்து பொங்கலிட்டார். தொடர்ந்து, 3 தொகுதிகளின் பாக முகவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.