அரசின் மகளிர் திட்டங்களை கூறி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க திமுகவினருக்கு அமைச்சர் பி.மூர்த்தி வலியுறுத்தல்

8 months ago 44

மதுரை: திமுக ஆட்சியின் மகளிர் நலத்திட்டங்களை கூறி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என, அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

மதுரை மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் திருப்பாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடந்தது. மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஹெலன் டேவிசன், மகளிர் அணி மண்டல பொறுப்பாளர் முன்னாள் எம்.பி., பவானி ராஜேந்திரன் தலைமை வகித்தனர். வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஆ.வெங்கடேசன் எம்எல்ஏ., மாநகர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரவண புவனேஸ்வரி, தெற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரமிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கே.உமா சிங்கத்தேவன் வரவேற்றார்.

Read Entire Article