அரசின் அறிவிப்பையும் மீறி ஆன்லைன் வகுப்புகள் - தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் அதிருப்தி

4 months ago 24

சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பையும் கண்டு கொள்ளாமல் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருவதால் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம் உட்பட கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தனியார் பள்ளிகள் முனைப்பு காட்டின. இந்நிலையில் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.

Read Entire Article