அரக்கோணம் வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல்

11 hours ago 2

அரக்கோணம் : அரக்கோணம் வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக கேரளாவுக்கு செல்லும் சில ரயில்களில் கஞ்சாவை சிலர் கடத்திச்செல்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தது.

அதன்பேரில் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்
உஸ்மான் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு ரயில்களில் சோதனை நடத்தினர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனையிட்டனர்.

அதில் ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தியவர் யார்? எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அேதபோல் நேற்று நடந்த சோதனையில், அேத ரயிலில் போலீசார்11
கிலோ கஞ்சாைவ பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை காஞ்சிபுரத்தில் உள்ள போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

The post அரக்கோணம் வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article