அரக்கோணம் - சென்ட்ரல் மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

4 hours ago 1

சென்னை: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்துக்கு அருகே திடீரென தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், அரைமணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் முக்கிய மார்க்கமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் உள்ளது. இத்தடத்தில் அவ்வப்போது மின்சார ரயில் சேவை தாமதத்தால், பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். திங்கள்கிழமை காலை, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர், ரயிலில் அடிப்பட்டு இறந்தார். அவரது உடல் இன்ஜினில் சிக்கியது. இதனால், அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்களின் சேவைகள் அரைமணி நேரம் பாதிக்கப்பட்டது.

Read Entire Article