
சென்னை,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. சித்தேரியில் இருந்து காட்பாடிக்கு சென்ற 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் தடம் புரண்டுள்ளது.
இண்ஜினில் இருந்து 3-வது ரெயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இறங்கின. மின்சார ரெயில் தடம் புரண்டதால், சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும் அனைத்து ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.