ஆர்.கே.பேட்டை: அய்யனேரி கிராமத்தில் 2 அங்கன்வாடி மைய கட்டிடங்களும் சேதமானதால் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.கே. பேட்டை ஒன்றியம் அய்யனேரி கிராமம் மற்றும் காலனியில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகளும், காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகளும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக 2 அங்கன்வாடி மைய கட்டிடமும் சேதமடைந்ததால் அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. ஓராண்டாகியும் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டவோ, அல்லது சேதமடைந்த கடிதத்தை சீரமைக்கவோ ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அய்யனேரி கிராமம் மற்றும் காலனியில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள், கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அய்யனேரி கிராமத்தில் சேதமான அங்கன்வாடி கட்டிடம்: புதிதாக கட்டித் தர கோரிக்கை appeared first on Dinakaran.