“அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறார் ஆளுநர்” - முத்தரசன் குற்றச்சாட்டு

4 months ago 11

சென்னை: “அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ள சட்டபூர்வ கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற தவறியுள்ள ஆளுநர், தமிழ்நாட்டில் நிலவி வரும் அமைதி நிலையை சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் இன்று (06.01.2025) தொடங்கியுள்ளது. கூட்டத்தை தொடங்கி வைத்து ஆளுநர் அரசின் கொள்கை திசைவழியை எடுத்துக்கூறும் உரையை வாசிப்பது வழக்கமான நடைமுறையாகும். இந்த மரபு வழியிலான நடைமுறையினை தமிழ்நாடு ஆளுநர் மூன்றாவது முறையாக நிராகரித்து பேரவையில் இருந்து வெளியேறியுள்ளார்.

Read Entire Article