அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய நபருக்கு நிபந்தனை ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

11 hours ago 2

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய நபருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் மலட்டாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மலட்டாறு கரையோரமாக உள்ள திருவெண்ணைய்நல்லூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. அதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக முன்னாள் எம்பி-யுமான கவுதம சிகாமணி, மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.

Read Entire Article