சென்னை: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போது வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி, தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர்சேட்டின் மனைவி பரவீன் உள்ளிட்ட சிலருக்கு திருவான்மியூரில் 3 ஆயிரத்து 457 சதுரஅடி மற்றும் 4 ஆயிரத்து 763 சதுரஅடி கொண்ட வீட்டுமனைகளை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக்கூறி அமைச்சர் ஐ.பெரியசாமி, ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன் உள்ளீிட்ட 7 பேர் மீது கடந்த 2013-ல் அதிமுக ஆட்சி காலத்தில் வழக்குப்பதியப்பட்டது.