அமெரிக்காவில் ரூ.2.34 கோடிக்கு தீபநாயகர் கோயில் செப்புத் திருமேனி விற்பனை: பொன்.மாணிக்கவேல் புகார்

4 months ago 26

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் தீபநாயகர் கோயில் செப்புத் திருமேனி, அமெரிக்காவில் ரூ.2.34 கோடிக்கு விற்கப்பட்டதாகக் கூறி, பொன்.மாணிக்கவேல் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி-யான பொன்.மாணிக்கவேல் குடவாசல் காவல் நிலையத்தில் இன்று (அக்.18) புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், தீபங்குடியில் தீபநாயகர் என்ற சமணக் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த 76 செமீ உயரம் உள்ள தீபநாயகர் சுவாமியின் செப்பு திருமேனி கடந்த 20 வருடத்துக்கு முன்பு திருடப்பட்டு, கடத்தப்பட்டது. ஏற்கெனவே சிலை கடத்தல் வழக்கில் 10 வருடம் தண்டனை பெற்ற சஞ்சீவ் அசோகன் என்கிற நபர்தான் இந்த சிலையையும் அமெரிக்காவுக்கு கடத்தியுள்ளார். ஆனால், அவரை இன்னமும் கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளனர்.

Read Entire Article