அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி.. செல்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் திட்டம்..!!

4 hours ago 2

டெல்லி: செல்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறிய டிரம்ப், பரஸ்பர வரிகளை விதித்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளார். தற்போது இந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பரஸ்பர வரி நிறுத்தி வைக்கப்பட்ட நாடுகளுக்கு அடிப்படை வரி 10 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா 46 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், சாம்சங் தனது உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்கா 10% வரி மட்டுமே விதித்துள்ளதால் இங்குள்ள ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் நொய்டா மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் நிறுவனத்துக்கு தொழிற்சாலைகள் உள்ளன. நொய்டாவில் செல்போன்களையும் ஸ்ரீபெரும்புதூரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் சாம்சங் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. வியட்நாமில் உள்ள தொழிற்சாலை சாம்சங் நிறுவனத்தின் மிகப்பெரிய செல்போன் உற்பத்தி மையமாக திகழ்கிறது. 2024ல் ரூ.4.42 லட்சம் கோடி மதிப்பிலான செல்போன்கள், உதிரி பாகங்களை சாம்சங் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

The post அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி.. செல்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் திட்டம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article