சென்னை: அமலாக்கத் துறையின் அறிக்கையால் திமுக அரசு ஆடிப்போயுள்ளதாகவும், அதன் காரணமாகவே டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருவதாகவும் தமிழக பாஜக மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில், திமுக ஆட்சியில் டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.