
கோவை,
அமராவதி அணையிலிருந்து நாளை முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, அமராவதி பிரதான கால்வாயின், புதிய பாசனப் பகுதிகளில் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டு 20.06.2025 முதல் 05.07.2025 முடிய 15 நாட்களுக்கு, அமராவதி அணையின் பிரதானக் கால்வாய் மதகு வழியாக 440 கன அடி / வினாடி வீதம் 570.24 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 25,250 ஏக்கர் அமராவதி அணை புதிய பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.