சென்னை: அனுமதி இன்றி குப்பை எரி உலையை இயக்கியது ஏன்? என சென்னை மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் பதில் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் நாளொன்றுக்கு சுமார் 10 டன் திறன் கொண்ட மக்காத குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரி உலைகளை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் மற்றும் மணலி சின்னமாத்தூர் பகுதிகளில் தனியார் நிறுவனம் மூலம் நிறுவியுள்ளது. இவற்றிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.