காங்கயம், ஜூன்27: காங்கயம் பகுதியில் சட்ட விரோதமாக கனிமவளங்கள் கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து திருப்பூர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் வெங்கடேசன் தலைமையில் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தப்பட்டது. காங்கயம் – முத்தூர் ரோடு பிரிவு அருகே அனுமதி இன்றி 9 யூனிட் ஜல்லிகற்கள் ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்தனர்.வாகனத்தை பறிமுதல் செய்து காங்கயம் போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post அனுமதியின்றி கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் appeared first on Dinakaran.