அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரை சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும்: இ.கருணாநிதி எம்எல்ஏ உத்தரவு

7 months ago 37

தாம்பரம்: அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரைகளை சீரமைக்கும் பணியை வரும் 20 நாட்களுக்கு முடிக்குமாறு அதிகாரிகளை எம்எல்ஏ இ.கருணாநிதி கேட்டுக்கொண்டார். பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றங்கரை பகுதியில் மழை வெள்ள பாதிப்பின் போது கரைகள் உடைப்பு ஏற்பட்டு அனகாபுத்தூர் சர்வீஸ் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அடையாறு ஆற்றின் கரையை 10 அடி உயர்த்தி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் நீர் வழி ஆதாரத்துறை அதிகாரிகள் அடையாறு ஆற்றங்கரை பகுதியில் ஆய்வு செய்தனர்.

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் உடனடியாக கரையை உயர்த்தும் பணிகளை மேற்கொண்டு 20 நாட்களுக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

The post அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரை சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும்: இ.கருணாநிதி எம்எல்ஏ உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article