ஊட்டி: நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும்,நாளையும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.