சென்னை: காதலித்த இளைஞருடன் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோ இணையதளத்தில் வெளியான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரிடம் 7 ஆண் போலீஸார் சுற்றி அமர்ந்து கொண்டு அதே வீடியோவைக் காண்பித்து துருவித் துருவி விசாரணை நடத்தியதும், பெண்ணின் பெயரை எப்ஐஆரில் அடையாளப்படுத்தியதும் கொடுமையின் உச்சம் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற பாலியல் ரீதியிலான விசாரணையின்போது பெண் போலீஸ் அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் என டிஜிபிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.