அந்தமான் கடல் பகுதியில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.0 ஆக பதிவு

2 weeks ago 3

புதுடெல்லி,

அந்தமான் கடல் பகுதியில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மாலை 4.50 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடலில் 30 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 7.45 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 91.60 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. முன்னதாக, இன்று காலை 11.27 மணியளவில் வங்கக்கடலில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

EQ of M: 5.0, On: 20/01/2025 16:50:39 IST, Lat: 7.45 N, Long: 91.60 E, Depth: 30 Km, Location: Andaman Sea.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/RDtHjmT68N

— National Center for Seismology (@NCS_Earthquake) January 20, 2025


Read Entire Article