மதுரை: அமித்ஷா அதிமுகவை கிள்ளுக்கீரையாக கருத்துகிறார் என மேலூரில் விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
மதுரை மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்ல விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.