பாலக்கோடு, மார்ச் 1: தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சாமனூர் ஊராட்சி பகுதிகளிலிருந்து அதிமுக கிளை நிர்வாகிகள் கவுரப்பன், முருகன், கார்த்திக், மணி, மூர்த்தி, ரகுவரன், சரண், மனோ, வெங்கடேசன், மதன்குமார், பாபு, சுகுமார், இளவரசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், சாமனூர் அதிமுக நிர்வாகி தமிழ்ச்செல்வன் தலைமையில், பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாரண்ட அள்ளி பேரூர் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான வெங்கடேசன், கவுன்சிலர் கார்த்திகேயன், ஒன்றிய அவைத்தலைவர் முருகன், சண்முகம், அண்ணாமலை, சரிதா குமார், வெங்கடாஜலபதி, ஜெகநாதன், மணிவண்ணன், அருள்பிகாஷ், வெங்கடேசன், ராஜா, நடராஜன், குமார், இந்திரகுமார், சுரேஷ்குமார் மற்றும்ஜெகதீசன், முருகன், சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post அதிமுகவினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.