தேனி: “சாதாரண தொண்டனாக இருந்த என்னை அரசியலில் உச்சத்துக்கு கொண்டு சென்றது அதிமுகதான். அதனால்தான் அக்கட்சியை ஒருங்கிணைத்து வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல தொடர்ந்து போராடி வருகிறோம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு விதை போட்டவர் ஜெயலலிதாதான். ஆனால் இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் சொந்தம் கொண்டாடி வருகிறார். மேலும் இவ்விழாவில் எம்ஜிஆர்.ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் இல்லாமல் தனக்கு பாராட்டு விழா வைத்துக்கொண்டார். இந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது குறித்து அவர்தான் பதில் கூற வேண்டும். அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன்தான். அவர் மீது எனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது பல தேர்தல்களில் நானும், அவரும் இணைந்து வேலை பார்த்தோம்.