சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திமுக உறுப்பினரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2022 பிப்.19ல் நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக உறுப்பினர் நரேஷ்குமார் மீது தாக்குதல் நடந்தது. நரேஷ்குமாரை தாக்கியதாக தண்டையார்பேட்டை போலீசில் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது செய்யப்பட்டது.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு!! appeared first on Dinakaran.