சென்னை: பாமக தலைவர் தான்தான் என்பதில் ராமதாஸ் உறுதியாக உள்ளார் என வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார். ராமதாஸ் – அன்புமணி இடையே நிலவும் பிரச்சனையில் சமாதானத்துக்கு வழியில்லை என அருள்மொழி தெரிவித்துள்ளார். மேலும் ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பதாகவும், தந்தை, மகன் இடையே பிரச்சனை நிலவுவதால் எங்களால் சமரசம் செய்ய இயலவில்லை எனவும் பு.தா.அருள்மொழி தெரிவித்துள்ளார்.
The post பாமக தலைவர் தான்தான் என்பதில் ராமதாஸ் உறுதியாக உள்ளார்: வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி appeared first on Dinakaran.