அதிமுக சின்னத்தை யாராலும் முடக்க முடியாது: செல்லூர் ராஜு

3 hours ago 2

மதுரை,

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக சின்னத்தை எப்போதும் யாராலும் முடக்க முடியாது. முடக்குவதற்கான சந்தர்பங்கள் இருந்தது; ஆனால் முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி நல்லதை செய்வார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவார். எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு அதிகரித்து கொண்டிருக்கிறது. துரோகிகளின் வாதங்களால் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய முதல்-அமைச்சர் தற்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை முதல்-அமைச்சர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்கவில்லை, தவெக தலைவர் விஜய்தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article