அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப் .12இல் தீர்ப்பு

3 hours ago 1

சென்னை: அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப்ரவரி .12 இல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணையை ஏற்க எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த விசாரணையானது உயர்நீதிமன்ற நீதிபதி ஆர் . சுப்பிரமணியம் மற்றும் அருள்முருகன் ஆகியோர் அமர்வில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. அந்த உட்கட்சி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மூத்த வழக்கறிஞர்கள் ஐ எம்.ஆர்.சுந்தரம் கட்சியில் எந்தப் பிளவும் இல்லை;

தனக்கு இருந்த ஆதரவு நீடிக்கிறது, எந்த மாற்றமும் இல்லை. பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என இ.பி.எஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. பின்னர் ஆணையம் தரப்பில் நடத்தப்பட்ட வாதத்தில், பெரும்பாலானோர் ஓபிஎஸ் பக்கம் உள்ளதால் இது பற்றி விசாரிக்க ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என ரவீந்திரநாத் தரப்பு வாதம் வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் தடையை நீக்ககோரிய மனுக்கள் மீது பிப்ரவரி .12ம் தேதி ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது.

The post அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப் .12இல் தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article