அதிமுக உட்கட்சி விவகாரத்தில் உத்தரவு எப்போது? - தேர்தல் ஆணையம் தெரிவிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

5 hours ago 3

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்ந்தெடுத்தது உள்பட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது, என்ற கோரிக்கைகளுடன் அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கக்கூடாது, என்று மனுவில் கூறியிருந்தார்.

Read Entire Article