‘அதிமுக  உடையக்கூடாது என்ற நிர்பந்தத்தால் பாஜகவுடன்  கூட்டணி’ - திருப்பூர் கூட்டத்தில் கண்கலங்கிய கவுன்சிலர்

1 day ago 4

திருப்பூர்: அதிமுக என்ற மாபெரும் கட்சி உடையக்கூடாது என்ற நிர்பந்தத்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக, திருப்பூர் அதிமுக கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் கண் கலங்கி பேசினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று (ஏப். 14) நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளரான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் உட்பட பலர் பேசினார்கள்.

Read Entire Article