அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு எதிரொலி அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு பணிக்கு 10,000 வீரர்களை மெக்சிகோ அனுப்பியது

3 hours ago 1

சியுடாட் ஜூவாரெஸ்: அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு பணிக்கு 10,000 தேசிய காவல் வீரர்களை மெக்சிகோ அனுப்பி உள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா, சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தப்படும் என டிரம்ப் அறிவித்தார். சட்ட விரோத குடியேற்றம் மற்றுமு் போதை பொருள் கடத்தலை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் கூறினார். மேலும் அமெரிக்காவின் தெற்கு எல்லை பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

டிரம்பின் செயல்களை தொடர்ந்து மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம்,‘‘ சட்ட விரோத குடியேற்றங்கள் மற்றும் போதை பொருள் கடத்தலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எல்லையில் பாதுகாப்பு பணிக்கு தேசிய காவல் படையினர் அனுப்பப்படும்’’ என்று உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்க-மெக்சிகோ எல்லை பகுதிகளுக்கு தேசிய காவல் படையை சேர்ந்த 10,000 வீரர்கள் நேற்றுமுன்தினம் அனுப்பப்பட்டனர். அமெரிக்க எல்லையை ஒட்டிய பகுதியான டிஜூவானா, சியுடாட் ஜூவாரெஸ் உள்ளிட்ட பல இடங்களில் மெக்சிகோவின் தேசியகாவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு எதிரொலி அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு பணிக்கு 10,000 வீரர்களை மெக்சிகோ அனுப்பியது appeared first on Dinakaran.

Read Entire Article