பாஜக-வுக்கு மெத்த பிடித்தமானவராக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தவறாமல் கலந்து கொண்ட நிகழ்வை தொட்டு தமிழக அரசியலில் ஏகப்பட்ட திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
அண்ணாமலைக்கும் அதிமுக-வுக்கும் இடையில் நடந்த வார்த்தை வீச்சுகளின் காரணமாக, 2024-ல் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. மோடி, அமித் ஷா அழைத்துப் பேசிய பிறகும் கூட்டணி முறிவை மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்டார் இபிஎஸ். இந்த நிலையில் தான், மார்ச் 3-ம் தேதி கோவையில் நடைபெற்ற எஸ்.பி.வேலுமணி மகன் திருமணத்தில் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் வழக்கத்துக்கு மீறிய நெருக்கத்தைக் காட்டி குலைந்து பேசினார் அண்ணாமலை.