அண்ணாமலை நவ.28-ல் லண்டனில் இருந்து தமிழகம் திரும்புகிறார் - ஜனவரியில் கிராமங்கள் தோறும் நடைபயணம்

4 months ago 14

சென்னை: லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ல் அண்ணாமலை தமிழகம் திரும்புகிறார். இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் இறுதியில் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் அண்ணாமலை நடைபயணத்துக்கு திட்டமிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டனிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டு வருகிறார். அண்ணாமலை லண்டன் சென்றதால், பாஜக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நியமித்து அறிவிப்பு வெளியிட்டார்.

Read Entire Article