அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தில் கைதான ஞானசேகரனுக்கு விரைவில் ரத்த பரிசோதனை

3 months ago 10

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனையை தொடர்ந்து, விரைவில் ரத்த பரிசோதனையை செய்ய சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், ஞானசேகரனுக்கு பின்னணியில் முக்கிய நபர்கள் மேலும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதை முன் வைத்து யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தன.

Read Entire Article