அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

4 months ago 14

சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான போக்சோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், தமிழக காவல் துறையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து விசாரணை செய்யவும், அதற்கு தமிழகத்தில் பணிபுரியும் வேறு மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் பட்டியலை அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து வரப்பட்டது. புலன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுமியின் தாயார் உயர் நீதிமன்றத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

Read Entire Article