அண்ணா அறிவாலயத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

4 months ago 15

சென்னை: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் உறுப்பினரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவருமான ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை அண்ணா அறிவாலயம் அண்ணா-கலைஞர் சிலை அருகில் 13ம் தேதி (இன்று) மாலை 4.30 மணியளவில் நடக்கிறது. விழாவிற்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெ.தங்கம் தலைலை வகிக்கிறார்.

நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை செயலாளர் அன்பகம் கலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு கரும்புகள், புத்தாடைகள் வழங்கி பொங்கல் நல் வாழ்த்து தெரிவிக்கின்றனர். விழாவில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post அண்ணா அறிவாலயத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Read Entire Article