அண்ணாநகர்: முகப்பேர் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்து 6 செல்போன்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை முகப்பேர் பகுதியில் அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து 6 செல்போன்களை திருடிச்சென்ற சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். பின்னர் திருட்டுப்போன வீடுகளில் இருந்த மர்ம நபர்களின் கைரேகையை பரிசோதனை செய்து அங்கு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பழைய குற்றவாளிகள் என அடையாளம் தெரியவந்தது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு முகப்பேர் சுற்றுவட்டார பகுதியில் ஜெ.ஜெ.நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாலையில் பைக்கில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர். விசாரணையில், பாடி பகுதியை சேர்ந்த கார்த்திக் (20), இவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து, அவரிடமிருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு அவரை கைது செய்தனர்.
The post அடுத்தடுத்த வீடுகளில் 6 செல்போன் திருட்டு: வாலிபர் கைது appeared first on Dinakaran.