கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு வெளியுறவு துறை அமைச்சர் விஜிதா ஹேரத் கூறுகையில், ‘‘அண்டை நாடான இந்தியாவுடன் நெருங்கிய உறவை பேணி வருகிறோம். மோடிஅரசு முறை பயணத்தில் இந்தியாவிற்கு இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த பல்வேறு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டது. இந்த ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்தியா வருகிறார். சம்பூர் சூரிய மின் நிலையத்தை திறப்பதுடன் கூடுதலாக பல புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். இந்தியா மீதான நல்லெண்ணக்கொள்கை நாட்டிற்கு பல நன்மைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் பல இந்திய திட்டங்களும் அடங்கும்” என்றார்.
The post அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.