மதுரை: கோயில் காவலாளி அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்றம், ஆக. 20 ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு விசாரணையின்போது போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 5 போலீஸார் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மதுரை மாவட்ட நீதிபதி தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான், “வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.