அச்சிறுப்பாக்கம் அருகே டிராக்டர் கவிழ்ந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு

6 months ago 19

செங்கல்பட்டு: அச்சிறுப்பாக்கம் அடுத்த இபி காலனி பகுதியில் மின் கம்பங்களை ஏற்றி சென்ற டிராக்டர், சாலையில் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இரு மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் பலத்த காயமடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் நகரில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்திலிருந்து, எலப்பாக்கம் கிராமத்துக்கு மின்கம்பங்களை கொண்டு செல்வதற்காக டிராக்டர் ஒன்று வரவழைக்கப்பட்டது. இதில், 6 மின்கம்பங்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் எலப்பாக்கம் நோக்கி சென்றது. அப்போது, அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் காட்டுக்கருணை பகுதியை சேர்ந்த அபிஷேக், திம்மாவரம் பகுதியை சேர்ந்த ரோகித் மற்றும் கிஷோர்குமார் ஆகிய மூவரையும், டிராக்டரில் ஏற்றி சென்றதாக தெரிகிறது.

Read Entire Article