TNUHDB | புதிய குடியிருப்பு வீடுகள் கட்ட மக்கள் எதிர்ப்பு விவகாரம் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு

5 months ago 37

மேலக்கோட்டையூர்: வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய குடியிருப்பு வீடுகள் கட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அம்மக்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக புதிதாக 600-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட உள்ளது. இதற்காக அரசு தரிசு புறம்போக்கு வகைப்பாட்டில் 15 ஏக்கர் நிலம் கடந்த 2021-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்தனர். இதற்கு மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ராஜீவ்காந்தி நகர் குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Read Entire Article