₹8 லட்சம் மின்சாதன பொருட்கள் திருட்டு

1 week ago 2

தர்மபுரி, பிப்.13: பொம்மிடி அருகே, குடோன் பூட்டை உடைத்து ₹8 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த பையர்நத்தம் பகுதியில், மின்வாரியம் சார்பில் டிரான்ஸ்பார்மர் விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் உள்ள குடோனில், மின்சாதன பொருட்களை வைத்திருந்தனர். நேற்று முன்தினம், குடோனுக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்க்கையில், ₹8 லட்சம் மதிப்பிலான அலுமினிய மின்கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதுபற்றி பையர்நத்தம் மின்வாரிய இளநிலை பொறியாளர் குமரவேல், பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post ₹8 லட்சம் மின்சாதன பொருட்கள் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article